நாகர்கோவில் கடலில் கடற்குளித்த இருவர் அலையில் அகப்பட்டு அகாலமரணமானார்கள்.
மிருசுவில் பகுதியைச்சேர்ந்த சுதன் (நாகர்கோவில் கிராமத்தில் கடந்தகால புகைப்பட பிடிப்பாளர்) என்பவரது மகனும், அதே இடத்தைச்சேர்ந்த அவரது நண்பனும் (20-25 வயது மதிக்கத்தக்கவர்கள்) நாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த கடலில் குளித்தபோது அலை அடித்துச்சென்று அகாலமரணமானார்கள். இச்சம்பவம் 26.10.2015 இன்று காலை சுமார் 9:00 மணியளவில் நடைபெற்றுள்ளது. இருவரது உடல்கள் இன்று சுமார் 2:00 மணியளவில் கரைஒதுங்கியுள்ளது.
மேலதிக தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.........!