|
இந்துமதம்
சனாதன தர்மத்தை கடைப்பிடிக்கும் இந்து மதமே உலகின் மிகவும் பழமையான மதமாகும்.
இச் சைவசமய மதம் எப்போது உருவானது? எப்படி உருவானது? எவருக்கும்
இதுவரையில் தெரியாததாகும். ஆகவே இவ் இந்துமதத்தைப்பற்றிய சில
விழக்கங்கள் இங்கே கூறப்பட்டுள்ளது.
விபூதியின் மகிமைகள்
சைவ சமய பெருமக்களிற்கு
திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து ஆகிய மூன்றும் மிகவும்
இன்றியமையாதவை. பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு
சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். திருநீற்றிற்கு
விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்சை என பல பெயர்கள் உண்டு.
சிவனின் அஸ்டமூர்த்திகள்
ஒருமுறை பிரம்மன் தனக்கு ஈடான வகையில்
தனக்கு ஒரு மகன் இருந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தார்.பிரம்மன்
நினைத்தவுடன் அவர் துடையின் மேல் ஒரு குழந்தை தோன்றினான்.அக்குழந்தையின்
கழுத்து நீலமாகவும் தலைமுடி சிகப்பாகவும் இருந்தது.அதனால் பிரம்மா அவனுக்கு
நீலலோகிதன் என பெயரிட்டார்.
தைப்பொங்கல்
தைப்பொங்கல் திருநாள் என்பது ஒரு மத சம்பந்தமான
திருநாள் அல்ல. மாறாக இது ஒரு தமிழர் திருநாளாகும். அதிலும் தமிழ் உழவர் திருநாள்
என்று சொன்னால் மிகையாகாது. உலகம் முழுவதும் மே தினம் என்று தொழிலாளர் தினத்தின
கொண்டாடுகின்றனர். இந்த பழக்கம் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களிற்கு முன்னரே உழவர்
திருநாளாக அதாவது விவசாய பெருமக்களின் தொழிலாளர் தினமாக தைப் பொங்கலை கொண்டாடி
மகிழ்ந்தனர் நம் தமிழ் மக்கள்.
தைப்பூசத்திருநாளும் அதன்
மகிமையும்.
பண்டைய காலத்தில் இந்து மதத்தின் கோட்பாடுகள் பரவலாக முறையற்று இருந்தது. இவற்றை
ஆதிசங்கரர் முறைப்படி நெறிப்படுத்தி ஆறு சித்தாந்தங்;களாக தொகுத்தார். முக்கியமாக
வழிபடும் தெய்வங்களின் அடிப்படையில் இந்த சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன.
சரஸ்வதி பூஜை-சகலகலாவல்லிமாலை
சிவனுக்கு ஒரு
இராத்திரி சிவராத்திரி.சக்த்திக்கு ஒன்பது இராத்திரி
நவராத்திரி."இதிலிருந்து சக்தியின் வலிமையை நாம் அறியலாம்"
நவராத்திரி புரட்டாதி மாதத்தில் கொண்டாடப்படும்.இதில் முதல்
மூன்றுநாட்களும் வீரத்தைவேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று
நாட்களும் செல்வத்தை வேண்டி இலக்குமியையும் இறுதி மூன்று
நாட்களும் கல்வியைவேண்டி சரஸ்வதியையும் வழிபடுகின்றோம்.
விஜயதசமி அன்று சிறார்களுக்கு ஏடு தொடக்குதல் முக்கியவிடையமமகக்
கருதப்படுகிறது. ஆலயங்களிலும், கல்விக்கூடங்களிலும் வாணி விழா
வெகுவிமர்சயாக கொண்டாடப்படுகிறது. ஆலயங்களில் கன்னி வாழை
வெட்டுதலும், மகிடடாசுரன்போரும் சிறப்பாக கொண்டாடப்படும்.
குறிப்பாக வீடுகளில் மக்கள் அவரவர் தொழிலுக்கு ஏற்ற ஆயுதங்களை
வைத்துஆயுத பூஜை வழிபபடும் நடைபெறும். அவ்வழிபாட்டிற்கு
பாடப்படும் சகலகலா வல்லிமாலை சரஸ்வதி அந்தாதி உள்ளே>>>
மங்கல விளக்கேற்றல்
மங்கல விளக்கேற்றல்
என்பது,மங்கலம்,விளக்கு,ஏற்றல் என்னும் சொற்களாலாய தொடர்மொழி.அவற்றுள்
மங்கலம் என்பது நன்மை,நலம்,காரியசித்தி,பொலிவு,அறம் என பல பொருட்களை
பயக்கும்.ஆகவே மங்கலத்தை தரும் விளக்கை ஏற்றி வணங்குதல் என்பது அதன்
பொருளாகும்.
நவராத்திரி கொலு
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை
கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.
ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக
எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று
அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று
பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.
சங்காபிஷேக தத்துவம்:
கார்த்திகை
சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்படும். அவரவர்
வசதிப் படி 108, 1008
என்ற ரீதியில் சங்குகளில் அபிஷேகப் பொருள்களை நிரப்புவர்.
சிவன் அபிஷேகப்பிரியர். இவரது தலையில் கங்காதேவி நிரந்தரமாகக்
குடியிருந்து குளிர்விக்கிறாள்.
செவ்வாய்
தோசம் என்றால் என்ன?
திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்படவோண்டிய விடயம்
செவ்வாய் தோசமாகும்.ஜாதகங்களில் லக்கினத்திலிருந்து 2,4,7,8,12 ஆம் வீடுகளில்
செவ்வாய் இருப்பது தோசமாகும்.இதை சந்திர லக்னம் (ராசி),சுக்ரன் இருக்கும்
இடங்களிலிருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று ஜோதிடங்கள் கூறுகின்றன.மூன்று
முறையிலும் தோசமிருப்பின் மிக கடுமையான தோசம் என கூறும் ஙhல்களும்
உண்டு.இருப்பினும் லக்கினத்திலிருந்து கணிப்பதற்கே முழுமையான தோச
பலனிருக்கிறது.இதிலும் 7,8 மிக கடுமையான தோசம், 4 கடுமையான தோசம், 12 தோசம் ,2
குறைவான தோசம் எனவும் சிலர் வரையறக்கின்றனர்.
|