நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மணவாளக்கோல திருவிழா மாபெரும் விழாவாக நடைபெறவுள்ளது.

அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மணவாளக்கோல விழாவை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் வந்து சிறப்பிக்கும் மாபெரும் இசைநிகழ்சி ஏற்பாடு செய்துள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

 

இதனை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதுவர் R.நடராஜன் அவர்கள், சிறுவர் அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியகட்சர் கணேசநாதன், மற்றும் வடமாகாண ஆளுனர் ரெஜினல் குறேய் ஆகியோர் சிறப்பு அதிதியாகளாக கலந்துகொண்டு மங்கழ விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கவுள்ளார்கள். அதனோடு மதிப்பிற்குரிய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் அவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதனை மிகவும் மகிழ்சியோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல் விழா ஏற்பாட்டாளர். 

Last Updated (Thursday, 25 August 2016 18:29)