நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பலியான மாணவர்களின் 20ம் ஆண்டு அஞ்சலியுடன் நினைவு தூபி திறப்புவிழா.

கடந்த யுத்தத்தின் போது பலியாகிய நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவச்செல்வங்களின் 20ம் ஆண்டு நினைவுநாள் 22.09.2015 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் மாணவர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டது அத்தூபியானது வடக்குமாகாண முதலமைச்சர் திரு சி.விக்கினேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்விற்கு மேலும் பல முக்கிய பிரமுகர்ளுடன் கிராம மக்களும் கலந்து அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
குறிப்பு:- இப்புகைப்படத்தினை எமது இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்து ஒத்துழைப்பு வழங்கிய செல்வன் ஆனந்தமூர்த்தி வைகரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றனர் நாகர்மணல் இணைய முகவர்கள்.