புலவியோடை நாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் கடந்த 24.06.2016 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கடந்தகால விடயங்கள் அனைத்தும் மீள் பரிசீலனை செய்யப்பட்டு, பின்னர் அனைத்து மக்களாலும் ஆலய வளர்ச்சி கருதி தகுதியான ஒரு புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.

தலைவர்:- திரு சின்னக்குட்டி செகராசா. (பரம்பரை நம்பிக்கை பொறுப்பாளர்)
உப தலைவர்:- திரு முருகேசு சிவஞானசுந்தரம்
செயலாளர்:- திரு நடராசா செல்வராசா
உப செயலாளர்:- திரு தனபாலசிங்கம் பரமானந்தராசா
பொருளாளர்:- திரு சித்திரவேல் ஞானவேல்

நிர்வாக உறுப்பினர்கள்.

திரு நாகலிங்கம் சிவலிங்கம்
திரு கிட்டிணபிள்ளை கணேசமூர்த்தி
திரு செல்லையா பாலசுப்பிரமணியம்
திருமதி இலட்சுமிப்பிள்ளை சிவசாமி
திருமதி சின்னம்மா மயில்வாகனம்

போஷகர்:- திரு ஆறுமுகம் நவரத்தினசாமி.

நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் ஆலய விடயங்கள் தொடர்பாக பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன அதன் பின்னர் பழைய நிர்வாகசபையினரால் அனைத்து ஆவணங்களும் புதிய நிர்வாக சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதிய செயலாளர் திரு நடராசா செல்வராசா அவர்களின் நன்றி உரையுடன் பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.

தகவல்:- நிர்வாகசபை, அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்.