புலவியோடை நாகதம்பிரான் ஆலய திருப்பணிவேலைகளின் தற்போதைய நிலை.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஆனி மாதம் 14ம் நாள் (29.06.2015) திங்கட்கிழமை நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை நாகதம்பிரான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் எம்பெருமான் அடியார்களே!!

 

தற்போது ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் யாவும் பூர்த்தியடைந்து தொடர்ந்து நடைபெற்று வரும் வர்ணப்பூச்சு வேலைகளுக்கும் நிதி போதாமையினால்  பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

அத்துடன் கும்பாபிஷேக கிரியைகளை நடாத்துவதற்கு சுமார் 20 லட்சம் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மெய்யடியார்களே! ஆலயத்தில் இதுவரை நடைபெற்ற திருப்பணிகள் யாவும் தங்களின் பூரண பங்களிப்புடனும், ஒத்துழைப்புடனும் தான் மிகமிக துரிதமாக நடைபெற்று வந்துள்ளன.

 ஆகவே இனிமேலும் மிகுதியாகவுள்ள திருப்பணி வேலைகள் யாவற்றையும் பூர்த்திசெய்து குறித்த தினத்தில் எம்பெருமான் ஆலய கும்பாபிஷேக விழாவை நடாத்துவதற்கு தேவையான நிதிநன்கொடைகளை வழங்கி, பூரண ஒத்துழைப்பினை நல்கி, எம்பெருமான் திருவருளைப் பெற்றுய்யுமாறு தங்களை பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

 

 

 

 

 

 

  

 

Last Updated (Saturday, 16 May 2015 03:29)