அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஆனி மாதம் 14ம் நாள் (29.06.2015) திங்கட்கிழமை நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை நாகதம்பிரான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வெளிநாடுகளில் வாழும் எம்பெருமான் அடியார்களே!!

 

தற்போது ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் யாவும் பூர்த்தியடையும் தறுவாயை நெருங்கியுள்ளது. எனினும் நடைபெற்று வரும் திருப்பணி வேலைகளுக்கும் ஆரம்பிக்கப்படவுள்ள வர்ணப்பூச்சு வேலைகளுக்கும் போதியளவு நிதியின்மையால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம் என்பதையும் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

எனவே தற்போது மிகுதியாக உள்ள கட்டுமானப்பணிகளும், கும்பாபிஷேகம் நடாத்துவதற்கும் சேர்த்து சுமார் 20 லட்சம் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மெய்யடியார்களே! ஆலயத்தில் இதுவரை நடைபெற்ற திருப்பணிகள் யாவும் தங்களின் பூரண பங்களிப்புடனும், ஒத்துழைப்புடனும் தான் மிகமிக துரிதமாக நடைபெற்று வந்துள்ளன.

 ஆகவே இனிமேலும் மிகுதியாகவுள்ள திருப்பணி வேலைகள் யாவற்றையும் பூர்த்திசெய்து குறித்த தினத்தில் எம்பெருமான் ஆலய கும்பாபிஷேக விழாவை நடாத்துவதற்கு தேவையான நிதிநன்கொடைகளை வழங்கி, பூரண ஒத்துழைப்பினை நல்கி, எம்பெருமான் திருவருளைப் பெற்றுய்யுமாறு தங்களை பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

 

Last Updated (Sunday, 05 April 2015 06:39)