அறிவிப்பு
நேரடி ஒளிபரப்பு - அருள்மிகு முருகையா தேவஸ்தான சூரன்போர்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கந்தஷஸ்டி விழாவின் 6ம் நாளாகிய 02.11.2019 சனிக்கிழமை அன்று மாலை 06:00 மணியளவில் ஆரம்பமாக இருக்கும் வசந்தமண்டப பூஜையுடன் கூடிய சூரசம்ஹாரம் (சூரன்போர்) என்னும் நிகழ்வு உலகமெங்கும் வாழும் அனைத்து மக்களுக்குமாக இவ்விணயத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கின்றது என்பதனை நாகர்மணல் வாசகர்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். https://www.youtube.com/channel/UC5tcB4Nwg9ouMu3AO0esJPA/live New link updated :- https://www.youtube.com/watch?v=mff6H1dEvFw நேரடி ஒளிபரப்பு அனுசரணை
Last Updated (Saturday, 02 November 2019 13:59) |
புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவுதினம். 2019நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 1995ம் ஆண்டு புரட்டாதி மாதம் 22ம் திகதி இலங்கை விமானப்படையினரின் புக்காரா விமானம் நடார்த்திய குண்டுத்தாக்குதலில் பரிதாபகரமாக உயிர் நீத்த 21 மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவெளுச்சி 22.09.2019 அன்றயதினம் மிகுந்த உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. புகைப்படங்கள்>>> Last Updated (Saturday, 14 May 2022 14:02)
நாகர்கோவில் வடக்கைசேர்ந்த அடியார் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு மின்பெயர் பலகை அன்பளிப்பு.நாகர்கோவில் வடக்கை சேர்ந்த {லண்டன்}அரியரத்தினம் ஜெயக்குமார் எனும் பக்தர் 11.05.2019 அன்று நாகர்கோவில் அருள்மிகு கண்ணைகை அம்மன் ஆலயத்திற்கு மின்விளக்கிலான பெயர்பலகையினை அன்பளிப்பு செய்துள்ளார். இம்மின்பெயர் பலகையினை வேலுப்பிள்ளை அரியரத்தினம் மற்றும் ஏரம்பு செல்வராசா ஆகியோரினால் ஆலய பூசகரிடம் கையளிக்கப்பட்டது. இவ் அன்பளிப்பினை மேற்கொண்ட நாகர்கோவில் வட்டைக்கைச்சேர்ந்த அரியரத்தினம் ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு கண்ணகை அம்மன் நல்லருள்வழங்கவேண்டும் என வேண்டுகின்றனர். Last Updated (Sunday, 12 May 2019 09:05) |
புளியடிப்பிள்ளையார்ர் தேவஸ்தான சங்காபிசேகம் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று சிறப்பாக நடைபெறும்வடமராட்சி கிழக்கு குடாரப்பு புளியடிப்பிள்ளையார்ர் தேவஸ்தான சங்காபிசேகம் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9 மணியளவில் எம்பெருமானுக்கு 108 சங்குகளால் ஆன அபிசேகம் ஆரம்பமாகி விசேட பூஜைகள் இடம்பெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும் இதனைத்தொடர்ந்த்து சிறப்பு நிகழ்வாக வர்ணம் இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சி பி.ப 1.00 மணியளவில் இடம்பெறும் . இக்கைங்கரிய தரிசனத்திற்கு பெரிந்திரளான அடியவர்கள் கலந்துசிறப்பித்து எம்பெருமானின் திருவருள்கடட்சத்தினை பெற்றேகுவீர்களாக . Last Updated (Sunday, 21 April 2019 03:43) புளியடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.வடமராட்சி கிழக்கு குடாரப்பு புளியடிப்பிள்ளையார் தேவஸ்தான மகாகும்பாபிஷேகம் கடந்த 10.04.2019 புதன்கிழமை காலை 9 மணியளவில் சிறபான முறையில் நடைபெற்றது இக்கைங்கரிய தரிசனத்திற்கு பெரிந்திரளான அடியவர்கள் கலந்துசிறப்பித்து எம்பெருமானின் திருவருள்கடட்சத்தினை பெற்றேகினர்.
Last Updated (Friday, 12 April 2019 15:35)
|