அறிவிப்பு
18.04.2011 இன்று கழகங்களுக்கான விளையாட்டுப்போட்டிகளின் முடிவு - படங்கள் இணைப்புவடமராட்சி கிழக்கு பிரதேசபிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளின் இறுதியாட்டம் 18.04.2011 அன்று நடைபெற்றது இதில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்தில் கடந்தகாலத்தில் விளையாட்டு வீரனாக செயல்பட்டு வந்த மூத்த உறுப்பினர் தற்பொழுது லண்டனில் இருந்துவந்து கலந்துகொண்டு உற்சாகமூட்டிய திரு நாகமுத்து சிறீ அவர்களின் ஊக்கிவிப்பும் உணர்வுகளும் கலந்த விளையாட்டு புகைப்படங்களுடன் படங்கள் இணைப்பு Last Updated (Tuesday, 26 April 2011 01:04) |
நாகர்கோவில் ஆலயத்தில் அருள்வாக்குநாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் பக்திக்கலைகொண்டு அடியார்களுக்கு அருவாக்கு கொடுத்து வியக்கவைத்துள்ள செய்தி கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை அடியார்கள் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் கூறப்பட்ட அருள்வாக்குக்களின் விபரம் கிடைக்கப்பட்டவுடன் அறிவிக்கப்படும். பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நாகபாம்பிற்கு பால் வைத்து நாகபாம்பு குடித்ததும் பால்குடித்த பாம்புடன் புகைப்படம் எடுப்பதற்கு எத்தணித்தபோது ஆலய குளுக்க்களினால் தடுக்கப்பட்டதும், அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் சாதரணபிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகளையும் கூறி எனது அருள்வாக்கு தொடரும் என்றும் என்னுள் உலாவருவது நாககன்னி என்றும் இப்பதி மக்களை நான் காப்பாற்றுவேன் என்று தெய்வவாக்குக் கொடுத்துள்ளது. இவ் அருள்வாக்கு கொடுக்க்ககும் நாககன்னி கோப்பாயில் உள்ள ஒரு ஆலயத்தில் தொடர்ந்து பக்கதர்களுக்கு அருள்வாக்கு கொடுத்துக்கொண்டே உள்ளது அடியார்களும் நாககன்னியிடம் தங்களின் இன்னல்க்களை கூறி ஆருள்வாக்கைப்பெற்று அதற்கான பரிகாராத்தினை செய்துள்ளார்கள். இதனால் அவர்களின் கஸ்ரன்ங்கள் விலகப்படுகின்றது. Last Updated (Tuesday, 12 April 2011 03:23) கழகங்களுக்கான இறுதி போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதுவடமராட்சி கிழக்கு பிரதேசசெயலம் நடார்த்தும் கழகங்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டிகளின் இறுதி எதிர்வரும் 08.04.2011 வெள்ளிக்கிழமை ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ன. ஆனால் இன்று 06.04.2011 பிற்பகல் 1.30 மணியளவில் பிரதேசசெயலகத்தில் உதவி அரசாங்க அதிபர் தலமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலைத்தொடர்ந்து இவ்விளையாட்டுப்போட்டி சித்திரை வருடப்பிறப்பினை கடந்த பிற்பாடு நடார்த்தப்படும் என்று விளையாட்டு உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்கள் அனைத்தும் முடிவடைந்தபின்னர் நாகர்கோவில் கழகங்கள் வெற்றியீட்டிய தகவல்களுடன் புகைப்டங்களும் இணைக்கப்படும். Last Updated (Wednesday, 06 April 2011 17:51) |
வறியகுடும்பங்களிற்கான உதவி வழங்கல் -[ படங்கள் இணைப்பு ]நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் - லண்டன் கிளையின் அனுசரணையுடன் -[ படங்கள் இணைப்பு ] வறியகுடும்பங்களிற்கான உதவி வழங்கல் நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த வறுமைக்குட்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து முகமாக நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் அதன் லண்டன் கிளையுடன் இணைந்து 28.01.2011 அன்று முதற்கட்டமாக 10 குடுமங்களை தெரிவுசெய்து அதில் 6 குடும்பங்களிற்கு தலா (5000) ஐந்தாயிரம் ரூபாய் பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளது. தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் விபரம்:-
இதனைத்தொடர்ந்தும் நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகம் லண்டன் கிளை நிதி வழங்கும் பட்சத்தில் எமது கிராமத்தின் வறிய குடும்பங்களிற்கும் வறியகுடும்பங்களிலிருந்து மேற்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களிற்கும் எம்மால் முடிந்த நிதி உதவிகளை செய்வதாக நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக லண்டன் கிளை உறுப்பினர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்கள். இப்பணிக்கு உதவவிரும்பும் நாகர்கோவில் கிராம மக்களாகிய நீங்கள் இங்கே தரப்ப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களால் ஆன உதவிகளை மேற்கொள்ளலாம். ->> முருகேசு கிரிதரன் :-00447749706765 ->> செல்லத்துரை கமலேஸ்வரன் :- 00447556028807 இப்பணி ஆனது மென்மேலும் தொடர்ந்து நடைபெற எமது பாராட்டுக்கள் நாகர்கோவில் இணையமான நாகர்மணல்.கொம்
Last Updated (Saturday, 29 January 2011 22:30) நாகர்மணல்.கொம் இணையத்தள நேயர்களிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011அன்பான வாடிக்கயாளர்களே இனிய புத்தாண்டிலே எமதுகிராமத்தகவல்களை உடனுக்குடன் தங்களுக்கு அறிவித்து உங்களின் மனங்களில் உறைந்திருக்கும் கவலைகளைப்போக்கி உங்களை சந்தோசப்படுத்துவதே எமது சேவையாகும்.
|