அறிவிப்பு
பூர்வீக நாகதம்பிரான் ஆலயவருடாந்த தீர்த்தோற்சவம் 2011பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் இந்தவருடம் மிகமிக எழிமையான முறையில் கொண்டாடப்படுகின்றது. எம்பெருமானுக்கு பால் இளநீர் அபிஷேகத்துடன் மட்டும் பூஜைகள் நிறைவடைகின்றது. இருந்தும் பத்தாந்திருவிழாவான தீத்தோற்சவம் 15.10.2011 சனிக்கிழமை நடைபெறுகின்றது நாகர்கோவில் வடக்குவாழ் மக்களாகியவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அவரவர் உரிமைகளை ஒன்றுதிரட்டி(வீகிதாசாரப்பணம்) இந்த ஒன்பது திருவிழாவைவிட தீர்த்தோற்சவம் பலமடங்கு வித்தியாசமான முறையில் கொண்டாடுவது எல்லோருக்கும் தெரிந்தவிடயம். ஆகவே இந்த ஆண்டும் மிகமிக எழிமையான முறையில் எம்பெருமானின் திருவிழா கொண்டாடடப்பட்டாலும் வடக்குமக்கள் சற்று வித்தியாசமானமுறையில் கொண்டாடவுள்ளார்கள். ஆகவே பூர்வீக நாகதம்பிரான் பக்த்தர்கள் அனைவரும் எம்பெருமானின் 2011 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவைகண்டு களித்து பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுய்வீர்களாக.
|
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 2011நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ 07.10.2011 இன்று இரண்டாவது நாள் பூர்வீக நகதம்பிரான் குடிகொண்டிருக்கும் எம்கிராம மக்கள் கடந்த பலஆண்டுகளின் பின்னர் மீள்குடியேறி முதல்முதலில் கொண்டாடும் திருவிழா சிறப்படையாமல் போவதை இட்டு கவலைகொண்டதுடன். அடுத்த ஆண்டில் இந்தவருடம் இழந்ததையெல்லாம் ஒன்றாக சேர்த்து கொண்டாடவேண்டும் என்று ஆனந்தமடைகின்றனர் எம்பெருமான் பக்தர்கள். நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 2011 இரண்டாம் நாள்.நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலயவருடாந்த உற்சவம் 06.10.2011 ஆரம்பமானது வழக்கத்திற்கு மாறாக இந்தவருடம் எம்பெருமானின் திருவிழா மிக மிக எழிமையான முறையில் கொண்டாடுவதாக தற்போது இயங்கிவரும் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இருந்தும் எம்கிராம மக்கள் பெருமானின் வருடாந்த உற்சவம் மிக சிறப்பான முறையில் கொண்டாடமுடியாமல் போனாலும் எம்பெருமானின் அருட்கடாட்சம் கிடைக்கவேண்டும் என்று பக்திப்பெருக்குடன் ஆலயம்சென்று வணங்கிவருகின்றார்கள். Last Updated (Friday, 07 October 2011 16:49) |
நாகர்கோவில் கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம்நாகர்கோவில் கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம் 2011 நாகர்கோவில் அருள்மிகு கெளத்தந்துறை விநாயகர் ஆலய பாலஸ்தாபனம் எதிர்வரும் 10.09.2011 மாலை கிரியைகள் ஆரம்பமாகி 11.09.2011 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாலஸ்தாபனம் நடைபெறவிருப்பதால் அனைத்து அடியார்களும் எம்பெருமானின் பாலஸ்தாபன விஞ்ஞாபனத்தில் கலந்துகொள்வதுடன் கெளத்தந்துறை விநாயகப்பெருமானின் அருள்கடாட்சம் பெற்றுய்வீர்களாக. இத்தகவலை கடந்தகால நிர்வாக தலைவரான திரு:- தியாகராசா நாகமுத்து அவர்களால் அறிவிக்கப்பபட்டது. தொலைபேசி இல:- 0094 775834192 கனடாவில் வசிக்கும் திரு:- முருகேசு அன்னக்கொடி குடும்பத்தினர் அன்னதானம் வழங்க உள்ளார்கள். நீண்டகால இடைவேளையின் பின்னர் கொளத்தந்துறை விநாயகர் ஆலயத்து முற்றத்துமணலில் அமர்ந்திருந்து அன்னதானம் சாப்பிடும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் அதேபோன்று எம்பெருமானின் அருளும் கிட்டவேண்டும். என்று கேட்டுக்கொள்கின்றோம் Last Updated (Friday, 09 September 2011 11:03) நாகேஸ்வரா வி. கழக விசேடபொதுக்கூட்டம் (லண்டன்)நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக விசேடபொதுக்கூட்டம். (லண்டன்)
புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் அங்கத்தவர்களை ஒன்றுதிரட்டும் முகமாகவும், தற்பொழுது மீள்குடியேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாகேஸ்வரா கழகத்தை மேம்படுத்தும் முகமாகவும் விசேட பொதுக்கூட்டம் கூடுவதற்காக லண்டன் வாழ் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் தீர்மானித்ததன் பயனாக. எதிர்வரும் 04.09.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் லண்டன் மாநகரில் "முகவரி" 122 Farnan Avenue, Walthamstow, Lomdon, E17 4NH. விசேட பொதுக்கூட்டம் கூடவிருப்பதால் லண்டன் வாழ் அனைத்து நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், மற்றும் உறுப்பினர்களாக விரும்பும் விளையாட்டு வீரர்கள், முக்கியமாக ஆதரவாளர்கள், ஆலோசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நன்றி
தகவல்:- மயில்வாகனம் சிவகரன் (லண்டன்) Phon:- 00447897224835 சிறீஸ்கந்தராஜா இரத்தினவேல் Phon:- 00447466376256 இலங்கையில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர்களான. க.இராசலிங்கம் -தலைவர் பா.அருணகிரி - செயலாளர் சி.சிவாயநம - உ.ப.தலைவர் Phon- 0094 776685054 Last Updated (Saturday, 03 September 2011 06:03) |