வருடாந்த ஒன்று கூடலுக்கான அழைப்பிதழ்
சுவீஸ் வாழ் நாகர்கோவில் மக்கள் நண்பர்களுடன் இணைந்து நடாத்தும் வருடாந்த ஒன்றுகூடலும் கலை நிகழ்வும். எதிர்வரும் 12.11.2016 சனிக்கிழமை அன்று மதியம் 11.30 மணியளவில் சூரிச் மாநகரில் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் இடம்பெறவுள்ள நிகழ்வில் 22.09.1995 அன்று நடைபெற்ற அனர்த்தத்தில் உயிர்நீத்த 21 மாணவச்செல்வங்களின் 21ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், அதனைத்தொடர்ந்து பல கலைநிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.
ஆண்டுகள் பல கடந்தாலும் நீங்காத வலிகளுடன் எமது மாணவச்செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தும் சுவீஸ்வாழ் நாகர்கோவில் மக்கள் ஒன்றுகூடி நிகழ்த்துகின்ற இந்நினைவுதின ஒன்றுகூடலில் புலம்பெயர் தேசமெங்கும் பரந்துவாழும் அனைத்து நாகர்கோவில் மக்களையும், நண்பர்களையும் கலந்து சிறப்பிக்க வருமாறு இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றனர்.
இடம்:- Kanzlei 151
8004 Zurich
நேரம்: 11.30
தொலைபேசி இலக்கம்
0041788425156
0041779983272
0041763402808
தகவல்:- சுவீஸ்வாழ் நாகர்கோவில் மக்கள்