நாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் சங்காபிஷேக பெருவிழா.
நாகார்கோவில் வடக்கில் அமைந்துள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் 06.10.2016 வியாழக்கிழமை அன்று 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி மதியம் 11 மணியளவில் சங்காபிஷேகம் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்றது. மாலை 7 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று எம்பெருமான் வீதியுலா வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருளினார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது