பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழா உற்சவத்திற்கு புலம்பெயர் அடியவர்களிடம் நிதிகோரல்.
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 22.09.2015 செவ்வாய் கிழமை ஆரம்பமாகி நாகர்கோவில் வடக்கு மக்களின் 10ம் திருவிழா எதிர்வரும் 01.10.2015 வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
ஆகவே 10ம் திருவிழா உபயகாரர்கள் புலம்பெயர் அடியவர்களிடம் தங்களது பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கு புலம்பெயர் நாட்டில் நிதிசேகரிப்பாளராக திரு குமாரசாமி விஜகுமார், திரு சிதம்பரப்பிள்ளை யோகேஸ்வரன், திரு சுந்தரலிங்கம் தர்மராசா மற்றும் புலத்தில் நிதிசேகரிப்பாளராக திரு ஆறுமுகம் சுந்தரலிங்கம், திரு கிட்டிணபிள்ளை சிவசாமி ஆகியோர்களை இவ்வாண்டிற்கான நாட்சீட்டு உபயகாரர்கள் தீர்மானித்துள்ளார்கள்.
எனவே எம்பெருமான் அடியவர்களே நடைபெறவிருக்கும் 10ம் நாள் தீர்த்தோற்சவ பெருவிழாவிற்கு தங்களின் பங்களிப்பினை வழங்கி நீங்களும் விழா உபயகாரர்களாகவும் இந்நிகழ்வில் முடிந்தவரையில் தங்களின் சரீர பணிகளிலும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் வண்ணம் மிகவும் பக்தியுடன் அழைக்கின்றோம்.
தகவல்:- நாட்சீட்டு உபயகாரர்கள்.
பரமானந்தராசா அருள்தாஸ்
தருமலிங்கம் சரவணபவன்
யோகநாதன் சுமன்