நாகர்கோவில் கிராமத்திற்கு வீதி விளக்குகளை பொருத்தி ஒளியூட்டிய நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்.
நாகர்கோவில் வடக்கு கிராம வீதிகளுக்கு புலம்பெயர்ந்து நாட்டில் வாழும் மக்கள் ஒன்றிய உறுப்பினர்களால் நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் உதவியுடன் எமது கிராமத்திற்கு வீதி விளக்குகள் 31.08.2015 திங்கட்கிழமை இன்று பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் கிராமம் தோறும் ஒளியூட்டி காணப்படுவதை அவதானிக்கமுடிகிறது. இதேபோன்று அன்றாட வாழ்வை நடாத்த அல்லல்படும் மக்களுக்கும் இவ் அமைப்பு பூரண ஒத்துழைப்பினை வழங்கி அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் ஒளியூட்டவேண்டும் என்று கிராம மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தினை பாராட்டி வாழ்த்துகின்றனர்.