அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் இனிதே நிறைவுற்றது.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் 29.06.2015 அன்று அதிகாலை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இக்கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமான் அடியவர்கள் கலந்துகொண்டனர்.புகப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாக செயலாளர் திரு பா.அருணகிரி அவர்கள் நன்றி உரையாற்றுகையில் புலம்பெயர் அடியவர்களால் வாரிவழங்கிய நிதி பங்களிப்பினாலேயே இந்த ஆலயம் மிகவும் துரிதமாகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது ஆகவே புலம்பெயர் அடியவர்களுக்கு மிகுந்த நன்றியினை கூறுவதுடன் எம்பெருமானின் திருவருள் கிடைக்கும் என குறிப்பிட்டது சிறப்பம்சமாகும்.