ரவிச்சந்திரன் என்பவரது படகு 24.05.2015 அன்று கடுங்காற்றினால் கடலோடு சென்றது
நாகர்கோவில் வடக்கச்சேர்ந்த இராசையா ரவிச்சந்திரன் என்பவரது படகு இயந்திரம்பொருத்தப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் கடலில் தரித்து நின்றவேளை தொடுவைகயிறு அவிழ்ந்து கடலில் காணாமல் போயுள்ளது. மாலை நேரம் ஆகியதால் தொழிலாளர்களின் கண்களுக்கு தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.