மரண அறிவித்தல்:- துரைராசா சீதாங்கனியம்மா (யோகம்மா) அவர்கள் 13.04.2015 இன்று இந்தியாவில் காலமானார்
நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், இந்தியா சேலம், செக்காரப்பட்டினா (முகாம்) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட துரைராசா சீதாங்கனியம்மா (யோகம்மா) 13.04.2015 திங்கட்கிழமை இன்று இந்தியாவில் அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பிஐயா பசுபதி அவர்களின் பாசமிகு மகளும்
காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்
தவபாக்கியம் (பகவதி) நடராஜசுந்தரம் (சந்திரன்) ,சந்திரசேகரம் (குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சாந்திமலர் ஜேந்திமலர் இவர்களின் அன்புத்தாயாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் எமது கிராமத்து மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றது.
இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறிவிக்கப்படும்>>
Last Updated (Monday, 13 April 2015 15:31)