வடமராட்சி கிழக்கு பிரதேச கலாச்சாரநிகழ்வில் கலைத்துறைக்கான விருதுபெற்ற எம்கிராம பெரியார்கள்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பதின்மூன்று ஆண்டுகளின் பின்னர் இவ்வாண்டு கலாச்சார விழாவும், "மருதசாகரம்" என்னும் வடமராட்சி கிழக்கின் பாரம்பரியங்களை உள்ளடக்கிய சிறப்பு நூலும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பதினைந்து கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளார்கள் அக்கலைஞர்களில் S.பசுபதி, V.விஜயரட்ணம், S.இராசரத்தினம் ஆகியோர் இணைந்து எமதுகிராமத்திற்கு பெருமைசேர்த்து தந்துள்ளார்கள். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
விருதுபெற்ற கலைஞர்களில் சிதம்பரப்பிள்ளை பசுபதி "ஓய்வு பெற்ற மருதங்கேணி பதில் உதவி அரசாங்க அதிபரும், பருத்தித்துறை பிரதேச செயலாளர்", வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் "ஈழத்தின் செளந்தரராஜன் என்கின்ற பட்டம்பெற்ற சிறந்த பாடகர்" சாமித்தம்பி இராசரத்தினம் "இயல்த்துறை, பாரம்பரிய கலைக்கூத்து" இவற்றுக்காக இவர்களுக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் திரு N.திருலிங்கநாதன் அவர்களால் பொன்னாடைபோர்த்தி, சந்தணமாலையினால் அலங்கரிக்க. பின்னர் இவர்களுக்கான நினைவுச்சின்னத்தினை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரூபினி வரதலிங்கம் "மேலதிக அரசாங்க அதிபர் யாழ்பாணம்" அவர்களினால் வழங்கப்பட்டது.
மருதசாகரம் என்னும் சிறப்பு நூலில் எமதுகிராமத்தின் தலையாக விழங்கும் நாகராஜன் குடிகொண்டு மக்களை காத்தருளும் பூர்வீகநாகதம்பிரான் ஆலயமும் மற்றய ஆலயங்களும் அடங்கப்பட்டுள்ளது. இந்நூலின் சிறப்புப்பிரதிகளை எமதுகிராமத்தவர்களும் பெற்று விழாவினை சிறப்பித்துள்ளார்கள்.
இவ்விழாவில் கலந்துகொண்ட எமதிகிராமத்தின் மைந்தர்களை எமது கிராமக்கள் பாரட்டுவதோடு இவர்களைப்போன்று மற்றவர்களும் சிறந்த விருதுகளைப்பெற்று எமது கிராமத்திற்கு பெருமைசேரப்பதற்கு எம்மாலான ஒத்துழைப்பினை வழங்குவோம் என்று கூறுகின்றார்கள்.
குறிப்பு:- விருதுபெற்ற மூன்று திறைமையாளர்களும் யா/நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்கள் என்பதும், பசுபதி, விஜயரட்ணம் இருவரும் ஒரேதரமாணவர்கள் (நண்பர்கள்) என்பதும் குறிப்பிடத்தக்கது.