பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 03.10.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பம்.
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா 03.10.2014 வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி எம்பெருமானுக்கும் பரிவாரமூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகளுடன் நாகேஸ்வரப்பெருமான் உள்வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருள்வார்
அதனைத்தொடர்ந்து மாலை நேர பூஜை 5:30 மணியளவில் நடைபெறவுள்ளது என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றனர்.
குறிப்பு :- விழாக்காலங்களில் எம்பெருமான் அடியார்கள் பால், இளநீர், புஸ்பம், ஊதுபத்தி, கற்பூரம், போன்ற பூஜைப்பொருட்களை வழங்கி வணங்கி நாகேஸவரப் பெருமானின் பேரருளினை பெற்றுய்வீகளாக.
தகவல் :- நிர்வாகம் (பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்)