இலங்கையில் சட்டபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தினுடன் இணைந்து செயல்பட அவுஸ்திரேலியா மக்கள் முன்வந்துள்ளார்கள்.
நாகர்கோவில் கிராமத்தின் மேம்பாட்டினை முந்நிட்டு கணன் கோம்ஸ் நிறுவனத்தினர் "GOLDEN MIUSICAL NIGHT" என்னும் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒன்றை எதிர்வரும் 04.10.2014 அன்று அவுஸ்திரேலியாவில் நடார்த்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்நிகழ்விற்கு அவுஸ்திரேலியாவில் முந்நிலை வகிக்கும் வங்கியொன்று முதன்மை அனுசரணையாளராகவும் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்க முன் வந்துள்ளமையும் பெருமைக்குரிய விடயமாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிகழ்வின்மூலம் கிடைக்கப்பெறும் நிதியினை எமது கிராமத்தில் சட்டபூர்வமாக பதிவுசெய்யப்பட்ட நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தினூடாக நாகர்கோவில் மக்களுக்கு வழங்கவுள்ளார்கள்.அனைவரும் அணிதிரண்டு இவ் இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாகர்கோவில் கிராமத்தின் வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம்.
தகவல்:- ம.கெங்காசுதன்