உயிருக்காக போராடும் தந்தையை காப்பாற்றுவதற்கு உதவிவேண்டி நிற்கும் பிள்ளைகள்.
நாகர்கோவில் கிழக்கைச்சேர்ந்த வேலுப்பிள்ளை தருமலிங்கம் (தறுமன்) என்பவர் பலகாலமாக நோயுற்று இருந்தபோது சாதாரண சிகிச்சைகளுடன் காலம் கடத்திய இவர் தற்போது உடல்நிலமை மேலும் சோர்வடைந்ததை அவதானித்த பிள்ளைகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று வைத்தியரை அணுகியபோது அவரின் நோயின் தன்மை வைத்தியரால் விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டது.
யாதெனில்? இவருக்கு இருதய வால்பில் விரிசல் காணப்படுகின்றது ஆகவே உடனடியாக (பைப்பாஸ்) சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேணும் இதனால் இவரை கொழும்புக்கு அழைத்துச்சென்று அங்கு சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதற்கு ஆகக்குறைந்தது ஐந்து இலடசம் பணம் தேவைப்படும் என்றும் வைத்தியரால் கூறப்பட்டது.
அன்றாட குடும்ப வாழ்க்கைக்காக திண்டாடும் பிள்ளைகளின் தந்தையான இவரால் இந்த சத்திரச்சிகிச்சை மேற்கொள்ள முடியாது என எமது கிராமமக்கள் அனைவரும் அறிவார்கள் எனவே இவரது நோய்க்குரிய சத்திரசிகிச்சையினை மேற்கொள்ளவேண்டிய பணத்தொகையினை வெளிநாட்டில் உள்நாட்டில் வாழும் பரோபகாரிகள் வழங்கி உதவுமாறு இருகரம் கூப்பி வேண்டிநிற்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள் (வே.தருமலிங்கம்) 0094/ 772173381