அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் வீம ஏகாதசி விரதம் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டது.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 12.03.2014 புதன்கிழமை வீமஏகாதசி விரதம் மிகவு சிறப்பான முறையில் ஆரமபிக்கப்பட்டு மறுநாள் அதாவது 13.03.2014 வியாழக்கிழமை காலை 7:30 மணியளவில் அடியவர்கள் நேர்த்திக்கடனாக நிறைவேற்றும் வளர்ந்து பூஜை நடைபெற்று. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
அதனைத்தொடர்ந்து ஆலயம் தற்போது வாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதால் அனைவரது வளர்ந்தும் ஒன்றாக சேர்த்து நாச்சிமார் ஆலய முன்றலில் ஒருவளர்ந்தாக வைத்தும், ஏனைய பொருட்களை சேர்த்து அன்னதான ஆயர்த்தங்கள் செய்து நண்பகல் 11.30 மணியளவில் பூஜை நடைபெற்று அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் இவ்வாலயத்தில் ஏகாதசியன்று புதிர்வழங்கும் நிகழ்வு நடைபெறுவது வழமை அவை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று அடியவர்கள் மனநிறைவுடன் வீடுதிரும்பியுள்ளார்கள்.