நாகர்கோவில் வடக்கு மக்களுக்கு இலங்கைக்கான இந்திய அரசின் வீட்டுத்திட்டம் வழங்கஏற்பாடு
நாகர்கோவில் வடக்குவாழ் மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்குவதற்காக இந்திய நிறுவனம் நிதிகளைவழங்க UNDP நிறுவனம் அதனை பொறுப்பேற்று அதற்கான விதிமுறைகள் மக்களுக்கு விரிவாக தெரிவிப்பதன் கூட்டம் 12.03.2014 அன்று நடைபெற்றது.புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
கிராமசேவையாளர் தோமஸ் யூட் அவர்களினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் UNDP நிறுவனத்தின் முகாமையாளர் அவர்கள் இவ்வீட்டுத்திட்டம் பற்றி விளக்கமளிக்கையில். இந்திய நிறுவனம் இத்திட்டத்திற்கு ரூபா ஐந்துலட்சத்து ஐம்பது ஆயிரம் மட்டுமே வழங்குவதற்காக முன்வந்துள்ளது. (550 000:00) இதனை ஆறுமாத கால எல்லைக்குள் கட்டிமுடிக்கவேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்கவும் என்றும் இந்த வீட்டுத்திட்டம் புள்ளிகளின் அடிப்படையில்தான் தெரிவுகள் இடம்பெறும் அதன் அடிப்படையில் ஊனமுற்றவர்கள் குடும்பத்தலைவர் என்றவகையில் அவர்களுக்கு அதிகூடிய புள்ளிகள் கிடைக்கும் அவர்களுக்கு இத்திட்டம் முதலிடத்தை வழங்கும் அதன்பின்னர் குடும்பங்களின் எண்ணிக்கைகள் நிலமைகள் என்ற வகையில் அவர்களுக்காக வழங்கப்பட புள்ளிகளின்படி தெரிவுகள் இடம்பெறும். குறிப்பாக இப்புள்ளிற்கான தெரிவு மேலிடத்தினால் வழங்கப்பட்ட கோவையில் அடங்கியுள்ளது நாங்கள் இப்புள்ளிக்கான விபரத்தினை தயாரிக்கவில்லை என்பதனை ஆணித்தனமாக மக்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
கூட்டத்தின் முடிவில் நாகர்கோவில் மேற்கு மக்களுக்கான வீட்டுத்திட்ட பதிவுகள் இடம்பெற்றது. மறுநாள் 13.03.2014 அன்று நாகர்கோவில் கிழக்கு மக்களுக்கான பதிவுகளும் இடம்பெற்றது. ஆகவே நாகர்கோவில் வடக்கு மக்களுக்கான வீட்டுத்திட்டம் மிகவிரைவில் கிட்டுமென்பதில் மக்கள் மிகுந்த சந்தோஷமடைகின்றார்கள்.