நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி இனிதே நிறைவுற்றது.
நாகர்கோவில் மகாவித்தியாலய இல்லமெய்வன்மைப்போட்டி 07.02.2014 இன்று மாலை 1:30 மணியளவில் ஆரம்பமாகியது. (1983ம் ஆண்டின் பின்னர் அதாவது 31வருடங்களின் பின்னர்) இந்தவருடம் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுக்கள் நடைபெற்றன. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு ச.சுகிர்தன் அவர்களுடன் மற்றும் சிறப்பு விருந்தினர் திரு க.பொன்னையா.(கோட்டக்கல்விப்பணிப்பாளர் மருதங்கேணி) மற்றும் இ.இராஜசீலன் (ஆசிரிய ஆலோசகர், உடற்கல்வி வடமராட்சி கல்விவலயம்) ஆகியோர் கலந்துகொண்டனர். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது
பின்னர் மாணவர்களுக்கிடையிலான போட்டிகள் இனிதே நடைபெற்று அவர்களுக்கான வெற்றிச்சான்றிதழ்கள், வெற்றிக்கேடயங்கள், வழங்கப்பட்டது மட்டுமல்லாமல். பளையமாணவர்கள் நிகழ்சிக்கள், பார்வையாளர்களுக்கான கயிறு இழுத்தல் போட்ட போன்றவை மிகவும் சுவாரசியமாக நடைபெற்றது. கயிறு இளுத்தல்போட்டிகான பரிசாக கனிந்த பழங்கள் நிறைந்த வாழைக்குலை வழங்கியமையும் சிறுவர் ஆரவாரத்துடன் அதனை சாப்பிட்ட காட்சியும் பார்போரை உளமகிழ வைத்தது.