நாகர்கோவில் வடக்கு ப.நோ.கூ.கிளைக்காக அடிக்கல் 27.01.2014 இன்று நாட்டப்பட்டது.
நாகர்கோவில் வடக்கு பலநோக்கு கூட்டுறவுக் கிளைக்கான கட்டத்திற்கு 27.01.2014 காலை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்விற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச உதவி செயலர் கணேசமூர்த்தி, வடமராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க பொது முகாமையாளர் திருமதி ,கலாவதி, நாகர்கோவில் மகாவித்தியாலய அதிபர் திரு சிவசங்கர், நாகர்கோவில் கிழக்கு, மேற்கு கிராமசேவையாளர் திரு தோமஸ் யூட்,நாகர்கோவில் கிளைக்குளுத்தலைவர் திரு க.ஆனந்தமூர்த்தி, பருத்தித்துறை பொலிஸ்குழுவினர் மற்றும் எமதுகிராமத்து மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அடிக்கல் விழாவில் கலந்துகொண்டுள்ளனர். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
இக்கிளைக்கான கட்டடத்தினை கடந்தகாலத்தில் மனேச்சராக கடமையாற்றிய அமரர் திரு பாலசுப்பிரமணியம் (மனேச்சர் ராசலிங்கம்) அவர்களின் நினைவாக இவ்விடத்தில் சங்கக்கடை இயங்கவேண்டும் என்று அவரின் மூத்த மருமகனாகிய திரு நாகமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் இக்கடையினை அமைத்துத்தருவதாக ஒப்பந்தம்செய்து நல்லெண்ணத்துடன் ஊர்மக்களின் வேண்டுகோளிற்கிணங்க இக்கடை அமைக்கப்படுகின்றது.