மரண அறிவித்தல்:- செல்லத்துரை சிவலிங்கம் 12.12.2013 அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் கிழக்கை வசிப்பிடமாகவும், நாகதம்பிரான் குடியிருப்பு குடத்தனையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவலிங்கம் (சுந்தரலிங்கம்) 12.12.2013 வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் கலமானார்.
சிவலிங்கம் அருந்ததி அவரது அன்புக்கணவரும், சிவபாலன் (சோதி, அம்பிகை, சிவபாலன், அருளமுதம், சிவசேகரம் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியை 13.12.2013 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் குடத்தனை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
இவரது பிரிவினால் துயருறும் குடும்பத்தனருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றனர்.
Last Updated (Friday, 13 December 2013 13:40)