|
வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
|
பொருள்::
|
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது
செயலிலும் உறுதி இருக்காது.
|
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
|
பொருள்::
|
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவதுஇ மீறி வந்து விடுமேயானால் மனம்
தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம். |
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
|
பொருள்::
|
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும்
உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத
அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.
|
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
|
பொருள்:: |
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
|
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
|
பொருள்:: |
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானதுஇ ஆட்சியாளரையும்
கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும். |
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
|
பொருள்:: |
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே
வெற்றி பெறுவார்கள்.
|
| |
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து. |
|
பொருள்::
|
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது.
பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர
வேண்டும். |
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
|
பொருள்:: |
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும்இ
தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். |
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
|
பொருள்:: |
இன்பம் தரக்கூடிய செயல் என்பதுஇ துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல்
துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும். |
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.
|
பொருள்:: |
'எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில்
உறுதியில்லாதவராக இருந்தால்இ அவரை உலகம் மதிக்காது. |
|