|
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
|
பொருள்::
|
ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய
ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது
தீதாக முடியும்.
|
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
|
பொருள்::
|
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச்
செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது. |
ஒல்லும்வாயெல்லாம் வினைநன்றேஒல்லாக்கால்செல்லும்வாய்நோக்கிச் செயல்.
|
பொருள்::
|
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற
வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.
|
வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
|
பொருள்:: |
எற்ற செயலையோஇ எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை
அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
|
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
|
பொருள்:: |
ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்புஇ அதற்குத் தேவையான பொருள்இ ஏற்ற கருவிஇ
காலம்இ மேற்கொள்ளப் போகும் செயல்முறைஇ உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். |
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
|
பொருள்:: |
ஈ.டுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன்இ அதற்கான முயற்சிக்கு இடையே
வரும் தடைகள்இ அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து
அறிந்து கொள்ள வேண்டும்.
|
| |
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல். |
|
பொருள்::
|
ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன்இ அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை
முதலில் அறிந்து கொள்ள வேண்டும். |
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
|
பொருள்:: |
ஒரு செயலில் ஈ.டுபடும்போதுஇ அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக்
கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும். |
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
|
பொருள்:: |
நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன்
பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும். |
உறைசிறியார்உண்ணடுங்கல் அஞ்சிக்குறைபெறிற்
கொள்வர்பெரியார்ப் பணிந்து
|
பொருள்:: |
'தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம்
எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள். |
|