|
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.
|
பொருள்::
|
செயலின் வலிமைஇ தனது வலிமைஇ பகைவரின் வலிமைஇ இருசாராருக்கும் துணையாக இருப்போரின்
வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.
|
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.
|
பொருள்::
|
ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி
மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை. |
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
|
பொருள்::
|
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில்
கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
|
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
|
பொருள்:: |
மற்றவர்களை மதிக்காமலும்இ தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும்இ தன்னைத் தானே பெரிதாக
விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.
|
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
|
பொருள்:: |
மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற
அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும். |
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
|
பொருள்:: |
தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டுஇ எல்லை மீறிப் போகிற ஒருவர்இ
நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக்
கதிக்கு ஆளாவார்.
|
| |
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. |
|
பொருள்::
|
வருவாய் அளவை அறிந்துஇ அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும்
வழியாகும். |
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைn
போகா றகலாக் கடை.
|
பொருள்:: |
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவுஇ குறைவாக இருப்பதால் கேடு எதுவும்
விளைவதில்லை. |
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
|
பொருள்:: |
எஇருப்பதுஇ இயற்றக்கூடியதுஇ இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல்
திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால்இ வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல்
தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும். |
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
|
பொருள்:: |
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து
பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக்
கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில்
கெடும் |
|