|
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.
|
பொருள்::
|
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப்
பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
|
தெரிந்தஇனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள்யாதொன்று மில்.
|
பொருள்::
|
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன்இ சேர்ந்துஇ ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்துஇ தாமும்
நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை. |
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.
|
பொருள்::
|
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய
காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
|
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.
|
பொருள்:: |
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக்
களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.
|
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
|
பொருள்:: |
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப்
பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும். |
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
|
பொருள்:: |
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல்
விட்டாலும் கேடு ஏற்படும்.
|
| |
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு. |
|
பொருள்::
|
நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம்
என்பது தவறு. |
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
|
பொருள்:: |
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில்
முடங்கிப் போய்விடும். |
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
|
பொருள்:: |
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும். |
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.
|
பொருள்:: |
தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால்இ
அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும். |
|