கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

சுற்றந் தழால்.


 Users online ::

         

                        பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள.

பொருள்::

ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.


                           விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும்.

பொருள்::

 எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும்இ வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.


                         அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.

 

பொருள்::

உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.


                       சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்.

 

பொருள்::

தன் இனத்தார்இ அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.


                         கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும்.

 

பொருள்::

வள்ளல் தன்மையும்இ வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.


                      பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத் தில்.

 

பொருள்::

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும்இ வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

              
  காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்  அன்னநீ ரார்க்கே உள.

 

பொருள்::

 தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.


                         பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.

 

பொருள்::

அனைத்து மக்களும் சமம் எனினும்இ அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால்இ அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.


                           தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண மின்றி வரும்.

 

பொருள்::

உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள்இ அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.


                          உழைப்பிரிந்து காரணத்தின்வந்தானை வேந்தன்இழைத்திருந் தெண்ணிக் கொளல்.

 

பொருள்::

ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய்இ மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால் வந்தவரைஇ நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
 

www.nakarmanal.com