|
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று.
|
பொருள்::
|
சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம்
சிறந்த செல்வமாகும்.
|
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
|
பொருள்::
|
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால்இ எந்தவொரு சொல்லிலும் குறைபாடு
நேராமல் கவனமாக இருக்க வேண்டும். |
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
|
பொருள்::
|
கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும்இ கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக்
கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.
|
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்.
|
பொருள்:: |
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற
அறமும்இ உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.
|
சொல்லுக சொல்லைப்பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
|
பொருள்:: |
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப்
பயன்படுத்த வேண்டும். |
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
|
பொருள்:: |
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும்இ மற்றவர்கள்
கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.
|
| |
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. |
|
பொருள்::
|
சொல்லாற்றல் படைத்தவனாகவும்இ சோர்வு அறியாதவனாகவும்இ அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும்
இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது. |
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
|
பொருள்:: |
வகைப்படுத்தியும்இ சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர்
சுட்டிக்காட்டும் பணியைஇ உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள். |
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
|
பொருள்:: |
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல
சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள். |
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்.
|
பொருள்:: |
'கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர்இ கொத்தாக
மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர். |
|