|
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
|
பொருள்::
|
பெரியோர்இ கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம்
இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.
|
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.
|
பொருள்::
|
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை
அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும்இ தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப்
பெற்றதாகிவிடும். |
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்.
|
பொருள்::
|
ஒருவரின் உணர்ச்சிஇ மனத்தைப் பொருத்து அமையும். அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து
சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.
|
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு.
|
பொருள்:: |
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும்இ அது அவர் சேர்ந்த
கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.
|
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
|
பொருள்:: |
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும்
தூய்மையானவையாக இருக்கும். |
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.
|
பொருள்:: |
மனத்தின் தூய்மையால் புகழும்இ சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.
|
| |
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும். |
|
பொருள்::
|
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும்
வழங்கும். |
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து.
|
பொருள்:: |
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே
வலிமை வந்து வாய்க்கும். |
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து.
|
பொருள்:: |
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின்
உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும். |
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்.
|
பொருள்:: |
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும்இ தீய இனத்தைக் காட்டிலும் துன்பம்
தரக்கூடியதும் எதுவுமே இல்லை. |
|