கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

பொச்சாவாம.


 Users online ::

         

                        இறந்த வெகுளியின் தீதே சிறந்த  உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

பொருள்::

அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதிஇ அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.


                           பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

பொருள்::

 நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமைஇ அறிவை அழிப்பது போல மறதிஇ புகழை அழித்து விடும்.


                         பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு.

 

பொருள்::

மறதி உடையவர்களுக்குஇ மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.


                       அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு.

 

பொருள்::

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.


                         முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும்.

 

பொருள்::

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன்இ துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.


                      இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்ப தில்.

 

பொருள்::

ஒருவரிடம்இ மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால்இ அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.

              
  அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின்.

 

பொருள்::

 மறதியில்லாமலும்இ அக்கறையுடனும் செயல்பட்டால்இ முடியாதது என்று எதுவுமே இல்லை.


                         புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.

 

பொருள்::

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.


                           இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

 

பொருள்::

மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள்இ அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.


                          உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின்.

 

பொருள்::

கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்

www.nakarmanal.com