|
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
|
பொருள்::
|
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும்இ சோம்பல் குடிகொண்டால் அது
மங்கிப் போய் இருண்டு விடும்.
|
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
|
பொருள்::
|
குலம் சிறக்க வேண்டுமானால்இ சோம்பலை ஒழித்துஇ ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். |
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.
|
பொருள்::
|
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடிஇ அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
|
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
|
பொருள்:: |
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப்
பெருமையும் சீரழிந்து போய்விடும்.
|
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
|
பொருள்:: |
காலம் தாழ்த்துதல்இ மறதிஇ சோம்பல்இ அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும்இ
கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்! |
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
|
பொருள்:: |
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை
எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.
|
| |
இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். |
|
பொருள்::
|
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு
ஆளாவார்கள். |
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்.
|
பொருள்:: |
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும்இ அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே
அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும். |
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
|
பொருள்:: |
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால்இ அவனது குடிப்பெருமைக்கும்இ
ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும். |
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
|
பொருள்:: |
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன்இ சோர்வில்லாத ஒரு மன்னன்இ அவன் சென்ற இடமனைத்தையும்
தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
|
|