கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

குற்றங்கடிதல்.


 Users online ::

         

                        செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.

பொருள்::

இறுமாப்புஇ ஆத்திரம்இ இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.


                            இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள்::

மனத்தில் பேராசைஇ மான உணர்வில் ஊனம்இ மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.


                         தினைத்துணையாங் குற்றம்வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்.

 

பொருள்::

 பழிக்கு நாணுகின்றவர்கள்இ தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதிஇ அதைச் செய்யாமல்இ தங்களைக் காத்துக் கொள்வார்கள்.


                       குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை.

 

பொருள்::

குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.


                         வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.

 

பொருள்::

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.


                      தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு.

 

பொருள்::

 முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?

              
  செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்.

 

பொருள்::

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.


                         பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.

 

பொருள்::

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.


                          வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.

 

பொருள்::

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது.


                          காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்.

 

பொருள்::

தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்.

                                                                                         

                                       

  www.nakarmanal.com