கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

கொடுங்கோன்மை.


 Users online ::

         

                      கொலைமேற்கொண்டாரிற்கொடிதேஅலைமேற்கொண்டல்லவைசெய்தொழுகும் வேந்து.

பொருள்::

அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசுஇ கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.


                           வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு

பொருள்::

 ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பதுஇ வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.


                         நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.

 

பொருள்::

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.


                       கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.

 

பொருள்::

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசுஇ நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.


                         அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை.

 

பொருள்::

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.


                      மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.

 

பொருள்::

நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

              
  துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.

 

பொருள்::

 மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.


                         இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.

 

பொருள்::

வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.


                           முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்.

 

பொருள்::

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால்இ வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.


                           ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.

 

பொருள்::

ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்..

www.nakarmanal.com