|
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
|
பொருள்::
|
இந்த உலகம்இ அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக்
கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.
|
கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
|
பொருள்::
|
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்குஇ மாறாக
இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள். |
பண்ணென்னாம் பாடற்கியை பின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம்இல்லாத
கண்.
|
பொருள்::
|
இரக்க உணர்வுஇ அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும்இ பாடலுடன்
பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.
|
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்.
|
பொருள்:: |
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல்
தோன்றுவதைத் தவிரஇ வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.
|
கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்.
|
பொருள்:: |
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல;
புண். |
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைடந்துகண் ணோடா தவர்.
|
பொருள்:: |
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும்
இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.
|
| |
கண்ணோட்டம் இல்லவர்கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல். |
|
பொருள்::
|
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே
கருதப்படுவார்கள். |
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு.
|
பொருள்:: |
கடமை தவறாமையிலும்இ கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே
உரிமையுடையதாகும். |
ஒறுத்தாற்றும் பண்பினார்கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.
|
பொருள்:: |
அழிக்க நினைத்திடும்
இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது
மிக உயர்ந்த பண்பாகும். |
பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
|
பொருள்:: |
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள்இ தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை
அருந்திக் களிப்படைவார்கள். |
|