|
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
|
பொருள்::
|
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற
பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
|
எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
|
பொருள்::
|
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களேஇ உயிர் வாழ்வோர் எனக்
கருதப்படுவார்கள். |
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
|
பொருள்::
|
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.
கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
|
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
|
பொருள்:: |
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும்இ பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும்
அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
|
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
|
பொருள்:: |
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்றுஇ மேலும் கற்றுக்கொள்பவர்களின்
ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள். |
தொட்டனைத் தூறு
மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும்
அறிவு.
|
பொருள்:: |
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக்
கொண்டே இருக்கும்.
|
| |
யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. |
|
பொருள்::
|
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோதுஇ ஒருவன் சாகும்
வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ? |
ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.
|
பொருள்:: |
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானதுஇ ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். |
தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
|
பொருள்:: |
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டுஇ
அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள். |
கேடில் விழுச்
செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை
யவை.
|
பொருள்:: |
கல்வி
ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான
சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை. |
|