|
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
|
பொருள்::
|
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே
சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.
|
கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்இல்லாதாள்பெண்காமுற் றற்று.
|
பொருள்::
|
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவதுஇ மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு
ஒப்பானது. |
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
|
பொருள்::
|
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி
கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.
|
கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளார் அறிவுடை யார்.
|
பொருள்:: |
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூடஇ அவனைக் கல்வியில் சிறந்தோன்
என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
|
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
|
பொருள்:: |
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி
வேடம்இ கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும். |
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
|
பொருள்:: |
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும்
நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
|
| |
நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
மண்மாண் புனைபாவை யற்று. |
|
பொருள்::
|
அழகான தோற்றம் மட்டுமே இருந்துஇ ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள்இ
கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள். |
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
|
பொருள்:: |
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம்இ நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக
துன்பத்தைத் தரும். |
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
|
பொருள்:: |
கற்றவர் என்ற பெருமைஇ உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். |
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.
|
பொருள்:: |
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோஇ அதே அளவு வேற்றுமை அறிவு
நூல்களைப் படித்தவர்களுக்கும்இ அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு. |
|