கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

இடனறிதல்.


 Users online ::

         

                        தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது.

பொருள்::

ஈ.டுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல்இ முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.


                            முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும்

பொருள்::

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும்இ அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.


                         ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.

 

பொருள்::

 தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்துஇ தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.


                       எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்.

 

பொருள்::

ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள்இ வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.


                         நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.

 

பொருள்::

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.


                      கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து

 

பொருள்::

 ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ஹதேர் கடலிலே ஓடாது' ஹகப்பல் நிலத்தில் போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

              
  அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி யிடத்தாற் செயின்.

 

பொருள்::

ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்துஇ அஞ்சாமை ஒன்றைத் தவிரஇ வேறு துணை தேவையில்லை.


                         சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்.

 

பொருள்::

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.


                          சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ டொட்ட லரிது.

 

பொருள்::

பாதுகாப்புக்கான கோட்டையும்இ மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும்இ அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.


                          காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு.

 

பொருள்::

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானைஇ சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

                                                                                         

                                       

  www.nakarmanal.com