|
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
|
பொருள்::
|
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்துஇ அதனைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ள வேண்டும்.
|
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
|
பொருள்::
|
வந்துள்ள துன்பத்தைப் போக்கிஇ மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத்
துணையாகக் கொள்ள வேண்டும். |
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
|
பொருள்::
|
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப்
பெரும் பேறாகும்.
|
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
|
பொருள்:: |
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு
உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
|
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
|
பொருள்:: |
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக்
கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும். |
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
|
பொருள்:: |
அறிவும்இ ஆற்றலும் கொண்ட ஒருவன்இ தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால்
பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.
|
| |
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். |
|
பொருள்::
|
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும்
ஆற்றல் யாருக்கு உண்டு? |
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
|
பொருள்:: |
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். |
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
|
பொருள்:: |
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின்
நிலைஇ முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும். |
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
|
பொருள்:: |
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக்
கேடு விளைவிக்கக் கூடியதாகும். |
|