|
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
|
பொருள்::
|
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண் அறிவு ஒன்றுதான்.
|
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
|
பொருள்::
|
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டுஇ நல்வழியைத் தேர்வு
செய்வதே அறிவுடைமையாகும்.
|
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
|
பொருள்::
|
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்இ அதை அப்படியே நம்பி ஏற்றுக்
கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
|
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
|
பொருள்:: |
நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப்
பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.
|
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.
|
பொருள்:: |
உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய
இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும். |
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.
|
பொருள்:: |
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே
அறிவாகும்.
|
| |
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். |
|
பொருள்::
|
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான்
சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள். |
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
|
பொருள்:: |
அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச
வேண்டியதற்கு அஞ்சுவார்கள். |
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
|
பொருள்:: |
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம்
ஏற்படாது. |
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.
|
பொருள்:: |
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு
வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை. |
|