கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

ஆள்வினையுடமை.


 Users online ::

         

                        அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.

பொருள்::

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல்இ முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.


                            வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.

பொருள்::

எந்தச் செயலில் ஈ.டுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.


                         தாளாண்மை என்னுந்தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.

 

பொருள்::

 பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வுஇ விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.


                        தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்

 

பொருள்::

 ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும்இ ஒரு பேடிஇ கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.


                         இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.

 

பொருள்::

தன்னலம் விரும்பாமல்இ தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார்இ நண்பர்கள்இ நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்துஇ அவர்களைத் தாங்குகிற தூணாவான்.


                       முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.

 

பொருள்::

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

              
   மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள்.

 

பொருள்::

திருமகள்இ மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும்இ முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.


                         பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி.

 

பொருள்::

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறுஇ அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.


                          தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

 

பொருள்::

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.


                          ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்.

 

பொருள்::

''ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.

                                                                                         

                                       

  www.nakarmanal.com