|
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும்.
|
பொருள்::
|
அடக்கமுடமை, என்ற நற்குணம்
ஒருவனுக்கு யாரும் வணங்கும் படியான தெய்வத்தன்மையை உண்டாக்கும். அடங்காமை என்ற
கெட்ட குணம் ஒருவனை அவன் இருப்பதைக்கூட யாரும் அறிய முடியாத அந்தகாரமான இருளில்
தள்ளிவிடும்.
|
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.
|
பொருள்::
|
(அதனால்)
அடக்கமுடமை என்னும் குணத்தைச் செல்வமாக
பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு அதைவிட
வல்லமை தருவது வேறில்லை. |
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
|
பொருள்::
|
(அடக்கமுடமை என்பது
ஒன்றுமறியாதவனாக அடங்கியிருப்பதன்று) கற்கவேண்டியதைக் கற்று அறியவேண்டியதை அறிந்து
அக்கல்வியறிவின் நெற்றியில் அடக்கமுள்ளவனாக இருந்தால், அந்த அடக்க எவ்வளவு
மிகுந்திருக்கிறதோ அவ்வளவுக்கு சிறப்புண்டாகும்.
|
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையிலும் மாணப்பெரிது.
|
பொருள்:: |
(அடங்கியிருப்பதென்றால்)தன்னுடைய கொள்கையை
விட்டு விடாமல் பிறரிடம்பணிவாகப் பேசி அடங்கி நடந்து கொள்ளுகிறவனுடைய புகள்
மலையைவிட மிகப் பெரிதான தோற்றமுண்டாகும்.
|
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
|
பொருள்:: |
(அந்த
அடக்கம் செல்வமுடயவர்களிடமும் இருந்தால்)
பிறரிடத்தில் பணிவாக அடங்கிநடப்பது
எல்லாருக்கும் நல்லதுதான். ஆனாலும்
செல்வமுள்ளவர்களிடத்தில். அந்தப்பணிவான
அடக்கம் அமையுமானால், அது செல்வத்தோடு
செல்வம் சேர்த்து போலாகும |
ஒருமையுள், ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து.
|
பொருள்:: |
(தம்முடைய ஐந்து புலன்களிலும்
அடக்கமுடையவர்களுக்காகைருப்பதே சிறந்த அடக்கமுடமையாகும்.) ஆமையானது தன்னுடைய நான்கு
கால்கள், தலைஆகிய ஐந்தையும் தன் இசைப்படி தன் ஓட்டுக்குள் அடக்கிகொள்வதுபோல் மனிதன்
தன் ஐந்து ஆசைகளையும் ஒரு பிறவியில் அடக்கியாள முடியுமானால் அது பின்வரும்
ஏழுபிறவிகளுக்கும் பாதுகாப்பாகும்.
|
| |
யா காவார் ஆயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு. |
|
பொருள்::
|
(ஐந்து
புலன்களில் மற்ற) எதை அடக்கி விட்டாலும்
நாக்கை அடக்கியாள வேண்டும். நாக்கை அடக்கி
பேசாவிட்டால் சொல் குற்றம் ஏற்ப்படுத்தி
துன்பப்படவேண்டும். |
ஒன்றானு தீச்சொற் பொருட் பயன் உண்டாயின் நன்று ஆகவது ஆகிவிடும்.
|
பொருள்:: |
(ஏனென்றால்) பேசுவது ஒரு சொல்லானாலும்
கெட்ட அர்த்தத்தைக் கொடுக்கக்கூடியதாக
இருந்துவிட்டால் காரியமும் கெட்டு
அடக்கமுடமையும் கெட்டுப்போகும். |
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
|
பொருள்:: |
(சொல்
குற்றம் ஒருவரை புண்படுத்துவிடலாம்.
அப்படியானால்) தீயினால் சுடப்பட்டு உண்டான
புண், வெளியே தளிம்பு நிலைத்து
விட்டாலும் உள்ளே அறிப்போகும், ஆனால்
வாயினால் சுடப்பட்டு உண்டான புண் வெளியே
தெரியாவிட்டாலும் உள்ளத்தில் ஆறாமல்
இருந்துகொண்டே துன்பமுண்டாகும். |
கதம் காத்துகற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்தது.
|
பொருள்:: |
(நாக்கு
பதற்றத்துக்குக் காரணம் கோபந்தான்;
அதனால்) கோபத்தை அடக்கப் பேச்சில்
நாவடக்கமுடயவனாக இருந்தால்
அப்படிட்ப்பட்டவனுடைய நலத்தை அறக்கடவுள்
தானாகவே தன் கடமையாற் காக்கும். |
|