கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

வெகுளாமை.


 Users online ::

         

                         செல்லிடத்துக்காப்பான்சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்.

பொருள்::

தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?


                           செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற.

பொருள்::

 வலியோரிடம் சினம் கொண்டால்இ அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.


                        மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்.

 

பொருள்::

 யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.


                       நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற.

 

பொருள்::

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.


                         தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.

 

பொருள்::

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால்இ சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம்இ அவனை அழித்துவிடும்.


                      சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.

 

பொருள்::

சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால்இ அது அவரை மட்டுமின்றிஇ அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

              
   சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

 

பொருள்::

 நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.


                         இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று.

 

பொருள்::

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.


                          உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்.

 

பொருள்::

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.


                          இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.

 

பொருள்::

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com