கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

வெ/காமை.


 Users online ::

         

                        நடுவு இன்றி நன் பொருள் வெ/கின் குடிபொன்றிக் குற்றம் ஆங்கே தரும்.

பொருள்::

  நீதியில்லாமல் பிறருக்குச் சொந்தமான பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டால் அது ஒருவனுடைய குடும்பத்தைக் கெடுத்துப் பல குற்றங்களையும் உண்டாக்கும்.


                           படு பயன் வெ/கிப் பழிபடுவ செய்யார் நடுவு அன்மை நாணுபவர்.

பொருள்::

அநிஞாயம் செய்ய அஞ்சுகிறவர்கள், அப்போதைக்கு வரக்கூடிய நண்மைகளை மட்டும் கருதிப் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள ஆசைப்பட்டு பழிச்சொல்லுக்கு ஆளாகக் கூடிய குறங்களைச் செய்ய மாட்டார்கள்.


                      சிற்றின்பம் வெ/கி அறன் அல்ல செய்யாரே மற்று இன்பம் வேண்படுவர்.

 

பொருள்::

 (பழிச்சொல்லுக்கு மட்டுமல்ல, பாவம் வருமென்று அஞ்சுகிறாவர்களுக்கு உண்டு) புண்ணியத்தால் வரக்கூடிய பேரின்பத்தை விரும்புகிறவர்களே, உடனே கிடைக்கின்ற சிற்றின்பங்களுக்கு ஆசைப்பட்டி தர்மமல்லாத காரியங்களைச் செய்ய மாட்டாகள்.


                       இலம் என்று வெ/குதல் செய்யார் புலம் வென்ற புன்மை இல் காட்சியவர்.

 

பொருள்::

  (பேரின்ப ஆசையும் கடநெத பெரியவர்கள் உண்டு.) ஐம்புல ஆசைகளையும் அடக்கி வென்றுவிட்ட குற்ற மற்ற அறிவுடையவர்கள் செல்வம் இல்லையே என்பதற்க்காக பிறருடைய பொருளைக்கவர்ந்து ஆசைப்பட மாட்டார்கள்.


                         /கி அகன்ற அறிவு என் ஆம் யார் மட்டும் வெ/கி வெறிய செயின்.

 

பொருள்::

 (கூர்ந்த படிப்புள்ளவர்களிலும் பலர் வெ/குகின்றார்களே) கூர்ந்து கவனித்து கல்வி கற்று விரிந்த அறிவுடையவர்கள் யாரானாலும் அவர்கள் பிறர் பொருளைக் கவர ஆசை கொண்டு வெறித்த செயல்களைச் செய்வாரானால் அவர்களுடைய அறிவு எதற்க்காகும்?


                      அறன் வெ/கி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெ/கிப் பொல்லாத சூழக் கெடும்.

 

பொருள்::

(கல்வியறிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இல்லறத்தான் தெய்வக்கருணையை நம்பினவன்.) தெய்வக் கருணையை நாடி இல்லற நெறி தவறாமல் வாழ்க்கை நடத்துகிறவன், பொருளில் ஆசைகொண்டு பொல்லாத செய்ய நினைத்தால் கெட்டுப்போவான்.

              
  வேண்டற்க வெ/கி ஆம் ஆக்கம் வினைவயின் மாண்டற்கு அரிது ஆம் பயன்.

 

பொருள்::

  (கருணை வாழ்க்கையுடன் இல்லறம் கெட்டுப்போவது மட்டுமன்றி) பிறருடைய பொருளைக் கவர்ந்து வருவதாகிய செல்வத்தை விரும்பக்கூடாது.ஏனெனில் அப்படி வரும் செல்வத்தின் பயனாக ஒருவனுடைய செல்வ நிலை உயர்ந்துவிடாது.


                      /காமை செல்வத்திற்கு யாது எனின் வெ/காமைவேண்டும் பிறன் கைப்பொருள்.

 

பொருள்::

(செல்வம் உயராது மட்டுமல்ல. உள்ள செல்வமும் அதனால் போய்விடும் ஆகவே) குறையாத செல்வம் எதுவென்றால் இன்னொருவனுக்கு சொந்தமான பொருளை அபகரிக்க நினைக்காமலிருப்பதுதான்.


                        அறான் அறிந்து வெ/கா அறிவு உடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு.

 

பொருள்::

 தர்மத்தை உனர்ந்து பிறருடைய பொருளை அபகரிக்கும் ஆசைகொள்ளாத அறிவுடயவர்களுடைய தகுதிக்குத் தக்கபடி செல்வ மகள் தானகவே அவருடம் வந்து சேருவாள்.


                         இறல் ஈனும் எண்ணாத வெ/கின் விறல் ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு.

 

பொருள்::

  (ஆகையினால்) ஆலோசனை செய்யாமல் பிறருடைய பொருளைக் கவர்ந்துகொள்ல ஆசைகொண்டால், உள்ள செல்வமும் அற்றுப்போகும், அபகரித்து வரும் செல்வத்தை வேண்டாமென்று விலக்கி விடுதலே தரும்.


  Back<<                                                    www.nakarmanal.com