|
வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தாழ் அமிழ்த்தம் என்று உணரல்
பாற்று.
|
பொருள்::
|
அமிர்தம் என்பது அதை உண்டவர்களை
அழியாதிருக்கச் செய்வது போல உயிர்கள்
இருந்துகொண்டேயிருக்கும் படி உலகத்தை
அழிவின்றி வாழ வைப்பது மழை. அதனால்
மழை அமிர்தத்துக்கு ஒப்பானது. |
துப்பார்க்கு துப்பு ஆய துபு ஆக்கித் துர்ப்பார்க்கு துப்பு
ஆயதூஉம் மழை.
|
பொருள்::
|
எப்படி என்றால் உணவினால் உயிர் வாழ வேண்டிய
மனிதர்களுக்கு உண்வை உற்ப்பத்தி செய்வதும். அந்த உணவை உண்ணும் போது தாகம்
தீர்க்கத்தானே ஓர் உண்வாக உதவுவதும் மழைத்தண்ணீதான். |
விண் என்று பொய்ப்பின், விரிநீர் வியன் உலகத்து உள்நின்று
உடற்றும்பசி.
|
பொருள்::
|
இந்த உலகம் மிகப் பெரிய கடலால் சூழப்பட்டதாக
இருந்தாலும், வானத்தில் இருந்து மழை பெய்யாவிட்டால் கடலோரம் தவிர மற்ற
உள்நாடுகளிலெல்லாம் உணவில்லாமல் உயிர்களைப் பசி வதைத்துவிடும். |
ஏரின் உழா அர் உழவர் புயல் என்னும் வாரி வளம் கின்றிக்கால்.
|
பொருள்:: |
ஏனெறால், மழை வராவிட்டால் உழவர்கள் ஏர் உழுது உணவுப்
பயிர்களை விளைவிக்க முடியாது. |
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம்
எல்லாம் மழை
|
பொருள்:: |
பஞ்சத்தால் உலக மக்களை தவிக்கச்செய்வதும்
அப்படித்தவிக்கின்றவர்களின் துன் பங்களை நீக்கித் துணை புரிந்து தூக்கி விடுவதும்
எல்லாம் மழைதான். |
விசும்பின் துளி விழின் அல்லால் மற்று ஆங்கே பசும்புல் தலை
காண்பது அரிது.
|
பொருள்:: |
(மழயில்லாமல் ஏர் உழுது உணவைப் பயி செய்ய
முடியாதென்றாலும் வேறு ஏதாவது இலை, காய் முதலியவைகளையாவது உண்டு உயி
வாழலாமென்றாலும்) வானத்தில் இருந்து மழைத்துளி விளாமல் புல் பூண்டுகூட முளைக்காது
(அப்படியிருக்க இலையும் காயும் எப்படி கிடைக்கும்? ) |
| |
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடித்து எழிலி தான் நல்காது
ஆகிவிடின். |
|
பொருள்::
|
கடலில் இருக்கின்ற தண்ணீரை ஆவியாக்கி ஆகாயத்திற்கு
கொண்டு போகின்ற மேகங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து இடி இடித்து மழைபெய்யாமல்
இருந்துவிடுமானால் கடலும் கூடக் குறைந்து வறண்டுபோகும். |
சிறப்போடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும்
உண்டு.
|
பொருள்:: |
(வானத்தில் இருந்து மழை பொழிவதால்தான், வானத்தில்
தெய்வங்கள் இருப்பதாக வானத்தை வணங்கு கிறார்கள்.அதனால்) வானம் மழை பெய்யாமல் வறண்டு
விட்டால் வானவர்கள் என்ற தேவர்களுக்குச் சிறப்பான விழாக்களும் பூசைகளும்
நடாத்தமாட்டார்கள். |
தாளம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின்,
|
பொருள்:: |
(வானவர்க்குப் பூசை செய்வது மட்டுமன்று) மனிதனுக்கு
மனிதன் உதவி செஉய்யும் தான தர்மங்களும், மனிதன் தனக்கே நண்மை யென்று செய்கின்ற
தவமும் உலகத்தி மழை இல்லாவிட்டால் நடைபெறா. |
நீர் இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும் வான் இன்றி
அமையாது ஒழுக்கு.
|
பொருள்:: |
ஆகையினால் நீரில்லாமல் உலகத்தில் ஒரு காரியமும்
நடக்காது. அந்த நீரும் (வாய்க்கால்களை வெட்டியும்,மலைகளை குடைந்தும்,அணைகள்
போட்டும் இன்னும் பல வழிகளில்) யார் யார் எப்படி முயன்றாலும், மழையில்லா விட்டால்
கிடைக்காது.
|
|