|
மனைத்தக்க மாண்பு உடையள் ஆகிதற் கொண்டான்
ளத்தக்காள்வாழ்க்கைத் துணை.
|
பொருள்::
|
குடித்தனத்துக்கு ஒத்த
பெருமையுடையவளும், தன்னுடைய கணவருடைய வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்கிறவளுமான
மனைவியே சரியான வாழ்க்கைத்துணைவி. |
மனை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
|
பொருள்::
|
(குடுமத்தின் பெருமைக்கு,மனைவிதான்
காப்பாளி) குடும்பத்துக்கு பெருமை
உண்டாக்கக் கூடிய நற்குனங்கள்
மனைவியிடத்தில் இல்லாமற் போனால் வேறு என்ன
சிறப்புகள் எவ்வளவுஇருந்தாலும்பயனற்றவையாகும் |
இல்லது என் இல்லாள் மாண்பு ஆனால் உள்ளது
என் இல்லவள் மாணாக் கடை.
|
பொருள்::
|
(மற்ற எது
இல்லாவிட்டாலும்) குடும்பத்துக்கு பெருமைதரும் குணங்கள் மட்டும் மனைவியிடத்தில்
இருந்தால் அந்த வீட்டில் இல்லாதது ஒன்றும் இல்லை.அந்த நற்குணங்கள் மனைவியிடத்தில்
இல்லாமற்போனால் அங்கே என்ன இருந்தாலும் ஒன்றும் இல்லாதது போன்றுதான்..
|
பெண்ணில் பெருந்தக்கயாஉள கற்பு என்னும்
திண்மை உண்டாகப் பெறின்?
|
பொருள்:: |
கற்பு
என்ற மன உறுதியுள்ளபெண்ணைக்காட்டிலும்
பெருமைதரக்கூடிய பொருள் உலகத்தில்
வேறு என்னைருக்கிஅது? ஒன்றுமில்லை
என்க. |
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது
எழுவான்பெய் எனப் பெய்யும் மழை.
|
பொருள்:: |
(கற்புடைய
மனைவியின் சிறப்பு என்ன வெனில்) கற்புடைய
பெண் தெய்வத்தைக்கூடத் தொழமாட்டாள். அவள்
கணவனையே தெய்வமாக வணங்கிச்
சிறப்படைவாள்.அப்படிப்பட்டவள் பெய் என்று
சொன்னால் மழை பெய்யும் படியான தெய்வ பலம்
உள்ளவள். |
தற்காத்துத் தற் கொண்டான் பேணி. தகை சான்ற
சொற்கத்து, சோர்வு இலாள் பெண்.
|
பொருள்:: |
(அப்படிக் கணவனையே தெய்வமாக
வணங்காவிட்டாலும் குறைந்த பட்சமாக) தன்னுடைய பெண் தனமையைத் தானே
காத்துக்கொள்ளக்கூடியவளாகவும், கணவனுடைய சுக செளரியங்களைக் கவனிப்பவளாகவும், திருமண
ஒப்பந்த சத்தியத்தைக் காக்கக்கூடியவளாகவும் இருப்பதில் சோர்வில்லாதிருப்பவளே ந்ல்ல
மனைவி. |
| |
சிறை காக்கும்
காப்பு எவன் செய்யும் மகளீர் நிறை
காக்கும் காப்பே தலை. |
|
பொருள்::
|
(அவள்
தனக்குத்தானே காவல்) பெண்களை வெளியே போக
விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறைவைத்துக்
காக்கின்ற காவல் எதற்க்காம்? தங்களை
தாங்களே காத்துக்கொள்கிற அவர்களுடை
கற்புணர்ச்சிதான் அவர்களுக்கு சிறந்த
காவல். |
பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்
சிறப்புப் புத்தெளிர் வாழும் உலகு.
|
பொருள்:: |
பெண்கள்
பெரிஞ்சிறப்பாகிய கற்பு உள்ள பெண்களை
மனைவியாக அடிந்தால், அப்படிப்பட்ட கணவன்
மார்கள் தேவலோக இன்பத்தை இங்கேயே
அடைவார்கள். |
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை
இகள்வார்முன் ஏறுபோல் பீடு நடை.
|
பொருள்:: |
(மனைவி
கற்புடையவளாக அமையாவிட்டால்) பெண்களுக்கு
புகழ்தரும் கற்ப்புக்குணம் இல்லாத பெண்ணை
மனைவியாகக் கொண்டுவிட ஒருவனை அதற்க்காக
யாரேனும் ஏளனம் செய்தால், அப்படி ஏளனம்
செய்கிறவர்களுக்கு முன்னால் அவன் ஆண்
பிள்ளைக்குரிய கம்பீரத்தோடு நிமிர்ந்து
நடக்க முடியாமல், தலை குனிய
வேண்டியதுதான். |
மங்கலம் என்ப மனையாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
|
பொருள்:: |
(ஆகையினால்) குடும்பத்துக்கு எல்லா
நண்மைகளையும் உண்டாக்கக்கூடிய மங்கலப்
பொருள் மனைவியாளின் பெருமைதான். அந்தப்
பெருமைக்கு அழகு தரும் ஆபரணங்கள்ம் மக்களை
பெறுவதுதான். |
|