|
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்.
|
பொருள்::
|
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை
எனப்படும்.
|
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.
|
பொருள்::
|
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று
கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும். |
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
|
பொருள்::
|
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால்இ சொன்னவரின் மனமே
அவரைத் தண்டிக்கும்.
|
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
|
பொருள்:: |
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள்இ மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப்
பெறுவார்கள்.
|
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
|
பொருள்:: |
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை
பேசுகிறவர்கள் தவமும்இ தானமும்
செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள். |
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
|
பொருள்:: |
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத
அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.
|
| |
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. |
|
பொருள்::
|
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப்
போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும். |
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
|
பொருள்:: |
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல்
தூய்மையுடன் விளங்கிடஇ சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும். |
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
|
பொருள்:: |
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை
எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும். |
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
|
பொருள்:: |
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட
உண்மையாகும். |
|